தேசமான்ய தேசபந்து ஜலீல் ஜீ யை பாராட்டும் நிகழ்வும் விசேட நிருவாக குழு கூட்டமும்


ஐ.எல்.எம் நாஸிம்-
ம்மாந்துறை பிரதேச செயலகத்தின் பிரதேச கலாசார அதிகார சபையின் விசேட நிருவாக குழு கூட்டம் இன்று (12) சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் ; பிரதேச செயலாளரின் தலைமையில் இடம் பெற்றது..

இந் நிகழ்வில் இந்தியாவில் இரண்டு ஜனாதிபதி விருதுகளையும், பல சர்வதேச விருதுகளையும் பெற்று சம்மாந்துறை மண்ணுக்கு பெருமையையும்,புகழையும் பெற்றுக்கொடுத்த வரலாற்று ஆய்வாளர். தேசமான்ய. தேசபந்து. ஜலீல் ஜீ யை பாராட்டும் முகமாக- சம்மாந்துறை பிரதேச கலாசார அதிகார சபையினால் அதன் தலைவர். பிரதேச செயலாளர் அல்-ஹாஜ். எஸ். எல்.முஹம்மது ஹனீபா , அதிகார சபையின் ஆலோசகர், அதிபர். திருவாளர். எஸ். கோணேஷ மூர்த்தி , கலாசார உத்தியோகத்தர் மௌலவி. ரஸ்மி மூஸா மற்றும் அதிகார சபையின் ஏனைய அதிகாரிகள் புடைசூழ பொன்னாடை போர்த்தி பாராட்டி, கௌரவித்ததோடு. பாராட்டப்பட ஆளுமையைப் பற்றி பாராட்டுரையை சிரேஷ்ட ஆசிரியையும்,கலாபூஷணம். பரீதா இஸ்மாயீல் , அதிபர்.எஸ்.கோணேஷமூர்த்தி ஆகியோர் நிகழ்த்தியிருந்தனர்.
இன் நிகழ்வில் கலாசார அதிகார சபையின் நிர்வாக, சிரேஸ்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -