திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவிப்பு.
எப்.முபாரக்-ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச படுதோல்வி அடைவது உறுதியாகியுள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.
கந்தளாயில் இன்று(10) மாலை ஜனாதிபதி வேற்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
இந்நாட்டில் அனைத்து அராஜகங்களும் நடைபெற்றது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தான் அனைத்தையும் மேற்கொண்டார்.
திருகோணமலை மாவட்டத்தில் அனைத்து தீவிரவாத அராஜகங்களையும் மேற்கொண்டவர் இந்த ஜனாதிபதி வேற்பாளர் கோட்டா தான்.
நோன்பு காலங்களின் கிரின்மேன் பூதம் மற்றும் இன்னோரன்ன அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொண்டவர் தான் இந்த கோட்டா அதனை திருகோணமலை மாவட்ட செயலாளர் அப்போது இராணுவத் தளபதியாக இருந்தார் இவரிடம் தான் அனைத்து செயற்பாடுகளும் நடைபெற்றது.
இப்படிப்பட்ட இனவாதிக்கு நாம் வாக்களிக்க கூடாது முஸ்லிம் மக்களின் பொருளாதாரம் மற்றும் பள்ளிவாயல்கள் மற்றும் அனைத்தையும் அடித்து உடைக்க கட்டளையிட்டவர் தான் ஜனாதிபதி வேற்பாளர் கோட்டா!
முஸ்லிம் சமூகம் கோட்டாவுக்கு அளிக்கின்ற வாக்குகள் மீண்டுமொரு யுத்தத்திற்கு வழிவகுக்க கூடியதாக இருக்கும்.
எனவே சிந்தித்து எதிர்கால ஜனாதிபதி சஜித் பிரேமதாசவிற்கு வாக்களியுங்கள் என்றார்.