இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிக்கை


கொழும்பு, நவம்பர் 18, 2019: இலங்கையர்களின் ஜனநாயக ரீதியான ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இலங்கை மக்களை அமெரிக்கா வாழ்த்துவதுடன், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் பணியாற்றுவதற்கு எதிர்பார்க்கிறது. ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடு என்பதற்கு பொருத்தமான வகையில் சுதந்திரமானதும் நீதியானதும் மற்றும் வெளிப்படையானதுமான ஜனாதிபதித் தேர்தலொன்றின் மூலம் இலங்கை அதனது குடியரசின் வலிமை மற்றும் மீளெழுச்சியை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகிறது. அமைதியான தேர்தலொன்றை ஊக்குவித்தமைக்காக தேர்தல்கள் ஆணைக்குழு, சிவில் சமூகம் மற்றும் அரச அதிகாரிகளை நாம் பாராட்டுகிறோம். உயரிய நல்லாட்சி, விரிவாக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி, மனித உரிமைகள் முன்னேற்றம் மற்றும் நல்லிணக்கம் ஊடாக நாட்டின் இறையாண்மைக்கு ஒத்துழைப்பளிப்பதிலும் மற்றும் அனைத்து நாடுகளும் செழிப்படையக்கூடிய இந்து-பசுபிக் பிராந்தியமொன்றை பேணிப் பாதுகாப்பதிலும் புதிய ஜனாதிபதியுடனும் அனைத்து இலங்கை மக்களுடனும் எமது பணியை தொடர்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -