அதிகளவான இறால் இனங்கள் மீனவர்களின் வலைகளில்

ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா கடற்பரப்பில் உள்ள பகுதிகளில் தற்போதைய நிலவரத்தின் படி அதிகமான இறால் இனங்கள் தங்களது வலைகளில் பிடிக்கப்படுவதாக கடல்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய தினமே(17) அதிகளவான இறால்கள் வலைகளில் பிடிக்கப்பட்டுள்ளது
கிண்ணியா ,பெரியாற்றுமுனை நடுத்தீவு உள்ளிட்ட கடல் தொழிலாளர்கள் மிக்க மகிழ்ச்சியடைகின்றார்கள். வெள்ளி இறால் எனும் இனமே இவ்வாறு அதிகமாக தங்களது வலைகளில் பிடிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்
ஒரு கிலோ கிராமின் விலை 1000 ரூபா வரை செல்கிறது
தொடர்ந்தும் இக் காலப்பகுதி அதிகமான பனி மூட்டங்கள் கொண்டதாக உள்ளதால் இவ்வாறான இறால் இனங்கள் பிடிபடுவதாகவும் மேலும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர் .


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -