திருகோணமலை மாவட்டம் கிண்ணியா கடற்பரப்பில் உள்ள பகுதிகளில் தற்போதைய நிலவரத்தின் படி அதிகமான இறால் இனங்கள் தங்களது வலைகளில் பிடிக்கப்படுவதாக கடல்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய தினமே(17) அதிகளவான இறால்கள் வலைகளில் பிடிக்கப்பட்டுள்ளது
கிண்ணியா ,பெரியாற்றுமுனை நடுத்தீவு உள்ளிட்ட கடல் தொழிலாளர்கள் மிக்க மகிழ்ச்சியடைகின்றார்கள். வெள்ளி இறால் எனும் இனமே இவ்வாறு அதிகமாக தங்களது வலைகளில் பிடிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்
ஒரு கிலோ கிராமின் விலை 1000 ரூபா வரை செல்கிறது
தொடர்ந்தும் இக் காலப்பகுதி அதிகமான பனி மூட்டங்கள் கொண்டதாக உள்ளதால் இவ்வாறான இறால் இனங்கள் பிடிபடுவதாகவும் மேலும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர் .