முஸ்லிம் தலைமைகள் ஆதவன் பாட்டை காட்டி மக்களை ஏமாற்றுகின்றனர்- பிரபல அரசியல் ஆய்வாளர் எம் எச் எம் இப்றாஹீம்


பாறுக் ஷிஹான்-
முஸ்லிம் சமூகத்தின் இந்த தோல்விக்கான முழுக்காரணம் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைமைகளின் சுயநலம் மட்டும் தான். அத்துடன் முஸ்லிம் தலைமைகள் ஆதவன் பாட்டை காட்டி மக்களை ஏமாற்றுகின்றனர் என பிரபல் அரசியல் ஆய்வாளர் எம் எச் எம் இப்றாஹீம் தெரிவித்தார்.

இலங்கை சோசலிச குடியரசின் 8வது ஜனாதிபதியாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவின் வெற்றி குறித்து கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலானது இலங்கை மக்களுக்கு பொதுவான ஒரு விடயத்தை தெளிவுபடுத்தி உள்ளது. நாங்கள் தொடர்ச்சியாக கூறிவந்தோம் அடுத்த ஜனாதிபதியாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ச தெரிவு செய்யப்படுவார் என்பதை கூறி இருந்தொம்.ஆனால் எங்களது கருத்துக்களை முஸ்லிம் தலைமைகள் அலட்சியம் செய்ததுடன் இவ்வாறான தலைவர்களே முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுப்பவர்களாக இருந்தனர்.

எமது முஸ்லிம் சமூகமானது ஒரு கட்சியை மட்டும் நம்பாமல் பரந்து செயற்பட்டிருந்தால் இன்று இந்த வெற்றியில் நாமும் பங்காளர்களாக இருந்திருப்போம். முஸ்லிம் சமூகத்தின் இந்த தோல்விக்கான முழுக்காரணம் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைமைகளின் சுயநலம் மட்டும் தான். புள்ளிவிபரம் தெரியாத தலைமைகளாக முஸ்லிம் தலைமைகள் காணப்படுகின்றது.
இவ்வாறு தான் 2010ல் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவந்த சாணக்கிய தலைமைக்கு மூக்குடைக்கப்பட்டதுஇ அதே போல இன்றும் சஜித் பிரேமதாசவை கொண்டு வந்து தற்போது மூக்குடைக்கப்பட்டு விட்டார். ஆகவே தான் முஸ்லிம் மக்களாகிய நாங்கள் இனியும் இந்த முஸ்லிம் தலைமைகளைக்கு பின்னால் சென்று ஏமாற்றமடையக்கூடாது. முஸ்லிம் தலைமைகளை நம்பவும் கூடாது என கேட்டுக்கொள்கின்றேன்.
மேலம் இன்று இந்த முஸ்லிம் தலைமைகள் ஆதவன் பாட்டை காட்டி மக்களை ஏமாற்றுகின்றனர்.ஆகவே தான் முஸ்லிம் மக்கள் இன்னும் இன்னும் ஆதவன் பாட்டை நம்பி வாக்களிக்காதீர்கள் என்றும் எதிர் வருகின்ற தேர்தல்களில் மக்களாகிய நீங்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் .எதிர்வரும் காலங்களில் இவ்வாறான ஒற்றுமையினை காரணமாக வைத்து செயற்பட சகல அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன் என கேட்டுக்கொண்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -