சாதாரணதரப் பரீட்சார்த்திகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஆளடையாளப்பத்திரம்


மினுவாங்கொடை நிருபர்-
திர்வரும் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களில், இதுவரை தேசிய அடையாள அட்டைகள் கிடைக்காதவர்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் 65,000 அத்தாட்சிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இவ்வாறான 10,000 அத்தாட்சிப் பத்திரங்கள், நேற்றும் நேற்று முன் தினமும் வழங்கப்பட்டுள்ளதாகவும், திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.
புகைப்படத்தினுடனான தேசிய அடையாள அட்டையின் தகவல் உள்ளடக்கப்பட்டு அங்கீகாரம் அளிக்கப்பட்ட உத்தியோகத்தரின் கையொப்பத்துடன் வழங்கப்படும் இந்த அத்தாட்சிப்பத்திரங்கள், பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -