வாழைச்சேனை ஜுமைல் மாவட்டத்தில் முதலிடம்...

எச்.எம்.எம்.பர்ஸான்-

லங்கை விமானப் படை நடாத்திய ஓவியப் போட்டியில் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவன் எம்.ஜே.எம். ஜுமைல் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

68 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை விமானப் படை தலைமயகம் நாடளாவ ரீதியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளை நடாத்தியது அதில் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்திய ஓவியப் போட்டியில் குறித்த மாணவன் முதலிடம் பெற்று பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

விமானப்படை தலைமயகம் அனுப்பி வைத்த சான்றிதழ்களை குறித்த போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்ற மாணவனுக்கு வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம்.பரீட் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -