கல்முனையில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயக்கு ஆதரவாக பிரசாரம் சூடுபிடிப்பு

பாறுக் ஷிஹான்-
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் பரவலாக பிரசார நடவடிக்கைகள் ஞாயிற்றுக்கிழமை(3) முன்னெடுக்கப்பட்டன.
தாமரை மொட்டு இலச்சினையுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸ ,முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச ,பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ஆகியோரது புகைப்படங்களுடன் கூடிய துண்டுப்பிரசுரங்கள் யாவும் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அமைப்பின் தலைவர் ரி.ஹரிபிரதாப் தலைமையில் கல்முனை நகர பகுதி எங்கும் பொதுமக்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

இத்துண்டுப்பிரசுரங்களை காலை தரவைப்பிள்ளையார் கோயிலில் காலை ஆராதனையுடன் அரசயடி அம்மன் கோவிலடி, பாண்டிருப்பு சந்தை ,தாளவட்டுவான் சந்தி ,நீலாவணை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு ,ஆகிய பகுதியில் அம்பாறை மாவட்ட அக்கட்சியின் ஆதரவாளர் நிமால் ஆரம்பித்து வைத்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் விழிப்பூட்டல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.தற்போது ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் இப்பிரசாரம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -