டீ.ஏ.ராஜபக்ஷ வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் ஜனாதிபதி


டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த வழங்கிலிருந்து ஜனாதிபதியை விடுவிப்பதாக விசேட நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் சற்று முன்னர் அறிவித்துள்ளனர்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தொடர முடியாதென்பதால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு அவர் மீது விடுக்கப்பட்டிருந்த பயணத் தடையையும் நீக்குவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வீரகெட்டிய, மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த கோபுரம் மற்றும் நூதனசாலை நிர்மாண பணிகளுக்காக 33.9 மில்லியன் ரூபாய் அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுக்களின் கீழ் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள விஷேட மேன்முறையீட்டு மனு, உயர் நீதிமன்ற நீதியரசர்களான எல்.டி.பி.தெஹிதெனிய எஸ். துறைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் விசாரித்து வந்தனர்.
இதேவேளை, இதற்கு முன்னதாக இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 33.9 மில்லியன் ரூபாய் பணத்தை நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களத்தால் நிரந்தர விசேட மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் இடம்பெறும் குறித்த வழக்கு விசாரணைகளை ஜனவரி மாதம் 9ஆம் திகதி வரையில் பிற்போடப்பட்டுள்ளதாக விசேட மேல் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையிலேயே குறித்த வழக்கிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விடுவிப்பதாக விசேட நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் சற்று முன்னர் அறிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -