கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட குடியேற்றம் மற்றும் காணி அபகரிப்பு தொடர்பில் பல ஆக்கங்களை எழுதி உள்ளேன்.
பிரேமதாசா காலத்தில் தீவிரமாக ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் சிங்களக்குடியேற்றம் ,மர்ஹீம் அஷ்ரபின் காலத்தில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் பல காணிகள் ,வயல் நிலங்கள் புனித பூமியாகவும்,தொல்பொருள் பிரதேசமாகவும் திட்டமிட்டு சூன்யமாக்கப்பட்டுள்ளது.
மேலும் கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றம் தேர்தலை நோக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்டது .இதனால் பாராளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் முஸ்லீம பிரதிநிதித்துவத்தில் பாரிய வீழ்ச்சியை உருவாக்கி உள்ளது.
குறிப்பாக 2010 ம் ஆண்டிற்குப் பின்னர் திருகோணமலை மாவட்ட முஸ்லீம்களது காணிகள். விடயத்தில் தீவிரப் போக்கு கையாளப்படுகிறது.அந்தவகையில கன்னியா மற்றும் புல்மொட்டை பிரதேச முஸ்லீம்களை இலக்காக வைத்து பௌத்த பேரினவாதம் தொடர்ச்சியாக செயற்படுகிறது .
01. ஸ்ரீ சந்தர்வ யுக்திக வன செனசுன - புல்மோட்டை -01 50 ஏக்கர் காணி
02. யான் ஓயா ராஜமஹா விகாரை - புல்மோட்டை -01 50 ஏக்கர் காணி
03. எனா நெகி கந்த ரஜ மகா விகாரை -புல்மோட்டை -01 50 ஏக்கர் காணி
04. மிகுந்து லென பிராண ரஜமகா விகாரை -புல்மோட்டை-01 50 ஏக்கர் காணி
05. சாந்தி விகாரை -புல்மோட்டை -04 50 ஏக்கர் காணி
06. நாகலென புராண ரஜ மகா விகாரை -புல்மோட்டை 03 50 ஏக்கர் காணி
07. படரகள ஆரண்ய சேனா சனய -கும்புறுபிட்டி கிழக்கு - 50 ஏக்கர் காணி
08. சப்தனாக பப்பதை வன சென -திரியாய் 50 ஏக்கர் காணி
09. பாகிய பப்பன வன சென சுன -கும்புறுபிட்டி கிழக்கு 50 ஏக்கர் காணி
10.தெபரகல பிராண வன செனசுன -கும்புறுபிட்டி கிழக்கு 50 ஏக்கர் காணி
மேற்குறிப்பிடப்பட்ட அளவு திட்டத்தின்படி புல்மோட்டை பிரதேசத்தில் மாத்திரம் சுமார் 300 ஏக்கர் பிரதேச மக்களின் வயல் காணிகள் புனித பூமி என்ற போர்வையில் அபகரிக்கப்டும் நிலைமை உள்ளது.
ஆனால் கடந்த காலத்தில் இந்த விடயம் தொடர்பில் கௌரவ மாகாணசபை உறுப்பினர் பல்வேறு ஆக்கபூர்வமான நகர்வுகளை மேற்கொண்டார்.இருந்தும் தற்போதைய அரசாங்கத்தை முஸ்லீம்களுக்கு எதிரானது என்று படம்காட்ட பிரச்சார உத்தியாக இந்தக் காணி விடயம் பேசப்படுகிறது.
உண்மையில் தேர்தல் காலங்களில் மட்டும் 2010 முதல் இந்தப் பிரச்சனை பிரசரசாரமாக பயன்படுத்தப்படுவது வரலாற்று சான்றாகும்.பிச்சைக்காரன் புண்ணாக புல்மோட்டை காணிப் பிரச்சனை சுழற்சி முறையில் ஒரு தரப்பால் கையாளப்படுகிறது வருந்தத்தக்கதாகும்.
ஏனெனில் கடந்த மஹிந்த அரசில் கௌரவ ஹகீம் தொடர்ச்சியாக அமைச்சராக இருந்தார்.நீதி அசைச்சராக கூட இருந்தும் இதற்கான தீர்வைப் பெறமுடியவில்லை.
ரணில. ஆட்சியில் வரவு செலவுத் திட்டம் ,நம்பிக்கை இல்லாப் பிரேரணை மற்றும் 56 நாட்கள் ஆட்சிக் கவிழ்ப்பு என்று SLMCன் தயவால் ஆட்சி நடாத்திய ரணில் விக்ரமசிங்கவிடம் இந்தப் பிரச்சனைக்கு அழுத்தம் கொடுத்து ஆட்சிக்கு முட்டுக் கொடுக்க முடியவில்லலை
மேலும் கிழக்கு மாகாண சபையில் இரண்டு தடவைகள் ஆளும் கட்சியாக இருந்தது ..இரண்டாம் தடவை முதலமைச்சரவை தனதாக்கியது,பலர் அமைச்சர்களாகவும் இருந்தனர்.இதன்போது அதிகாரத்தை பயன்படுத்தி இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை.
திவிநெகுச சட்டம் பஷீர் ராஜபக்சவால் நீதிமன்ற கட்டளைப்படி மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டது .இந்தச் சட்ட மூலம் மாகாணசபை அதிகாரத்தை குறைப்பதாக பலரும் விமர்சித்த போது.எந்த நிபந்தனையும் இல்லாமல் SLMC ஆதரித்தது.இதற்காக பலருக்கு அபிவிருத்தி நிதி என்ற போர்வையில் சலுகைகள் வழங்கப்பட்டது.இந்தச் சந்தர்ப்பத்திலாவது புல்மோட்டை காணிப் பிரச்சனைக்கு நிபந்தனையுடன் தீர்வைக் கண்டு இருக்கலாம்.
வெறுமனே அறிக்கை விடுவதும்,படங்களை முகநூலில் போடுவதும்,அதிகாரிகளை சந்திப்பதுமே காலோட்டத்தில் சாதனையாக உள்ளது.
மத்திய மற்றும் மாகாண ஆட்சியில் பங்காளர்களாகவும்,முதலமைச்சராகவும் இருந்து சாதிக்காத விடயத்தை,அடுத்த 5வருடத்திற்கு எதிர்க்கட்சியில் இருந்து சாதிக்க முடியுமா?
இயலாமல் போன விடயத்தை இயலாது உள்ள இந்தச் சூழ்நிலையில் இனவாத சுவாலையை ஏற்றுவதற்கு தயாராகிறது ஆபத்தாகும்.ஆகவே இந்த விடயத்தில் மக்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்..ஆளும்கட்சியாக இருந்த தீர்வுகாணாத விடயத்தை எதிர்க்கட்சியினராக இருந்து சந்திப்பது எப்படி ????அதிக பட்சம் இனவாத்த்தை சூடாக்கி வாக்குகளை அடுத்த பாராளுமன்ற மற்றும் பொதுத் தேர்தலுக்கு அதிகரிக்கலாம்.ஆனால் இது சிங்கள நமது மாவட்ட சிங்கள மக்களுடனான உறவில் பாரிய விரிசலை உருவாக்கும் ..இதற்கு மாவட்ட இளைஞர்கள் துணைபோக்க் கூடாது.
இந்தக் காணி விடயத்தில்
1-முஸ்லீம்களின் வாக்குகளை குறிவைத்து மாவட்டத்தில் வேட்டையாடும் மாற்றுக் கட்சியினர் (ACMC&UNP&SLFP) அக்கறை காட்டாது இருப்பது கவலைக்குறியாதாகும்.
2-அத்துடன் SLMC இதனை தனது பிரச்சார உத்தியாக வைத்து தன்னிச்சையாக கையாள்வதும் தவிர்க்கப்பட வேண்டியது.
இந்தக் காணி விடயத்தில் கௌரவ அன்வர் தனத்து போராடுகிறார்.இவரின் அதிகாரம் ஆளுமைக்கு அரசியல் சூழ்ச்சிகள் தடையாக உள்ளது.SLMC தலமை தேர்தலுக்கான ஊருகாயாக திருகோணமலையில் புல்மோட்டை காணி விவகாரம் ,அம்பாறையில் ஒலுவில் துறைமுகம்,கல்முனை தமிழப் பிரதேசபை ,சாய்ந்தமருது தனிப் பிரதேச்சபை மட்டக்களப்பில் காணிப் பிரச்சனை என்பவற்றை அரசியலோடு தேர்தலுக்காக ஊருகாயாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் பல படிப்பினைகளை கற்றுத் தந்துள்ளது.குறிப்பாக முஸ்லீம்களது எதிர்கால அரசியலில் பல சாதகமான சமிக்ஞைகளை காட்டி உள்ளது.
1-வரலாற்றில் இணைந்து போக முடியாது என்ற முஸ்லீம கட்சிகளிடையே இனிவரும் காலங்களில் முஸ்லீம் கூட்டமைப்பிற்கான அழைப்பை விடுத்துள்ளது.
2-தேசியக் கட்சிகளுடன் நிபந்தனை அற்ற ஆதரவு மற்றும் சமூகத்தின் பிரச்சனைகளை அடையாளம் காணாமல் சுயநலத்திற்காக துணைபோவது ஆபத்தானது்
3-வடகிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லீம்கள் தேசியக் கட்சிகள் இரண்டுடன் இருக்கின்றனர்்ஆனால் பெரும்பான்மையாக வடகிழக்கில் வாழ்கின்றன முஸ்லீம்களது பாதுகாப்பை இனவாதம் மூலம் உரமூட்டுவது ஆபத்தில் வந்துவிடும்.
4-இரண்டு தேசியக் கட்ளுசிடனும் இணக்கப்பாட்டு அரசியல் தேவையானது ..ஐதேகட்சியை மட்டும் ஆதரிப்பதால் எதையும் சாதிக்க முடியாது
5-பெரும்பான்மை மக்களிடம் தங்களது வாக்குகளால் ஓரளவேனும் சாதிக்க முடியும் என்ற மனப்பாங்கு உருவாகி உள்ளது.இதனால் நாம் அனுசரித்துப்்போகின்ற அரசியல் நிகழ்ச்சி நிரலை உருவாக்க வேண்டும்.
ஆகவே பழைய பட்டாளங்களயும,குப்பைகளையும் தோண்டி நாற்றம் எடுக்காமல்,,மாற்றுப் பயணத்திற்கான அரசியலை முஸ்லீம தலமைகள் முன்னெடுக்க வேண்டும்.
FAHMY Mohideen(UK)
LLB(Hons),LLM,MPhil
Solicitor (England &Wales)