கல்லூரியின் மாணவ முத்துக்களின் குழு நடனங்கள் கலை மற்றும் தனி நிகழ்வுகள் என அரங்கேறிய நிகழ்வுக்கு அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ் செய்க் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் நளீமி அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.
குழந்தைகளின் ஆங்கில, தமிழ் மொழி விருத்திக்கும், ஏனைய திறன் விருத்திகளுக்கும், மார்க்கத்தையும் ஏனைய மனிதர்களையும் நேசிக்கக்கூடிய ஆளுமை மிக்கவர்களாகவும் பாடசாலைக் கல்வியிலும் ஏனைய திறன்களிலும் முன்னிலை பெறக்கூடிய மாணவர்களை, கடந்த 15 வருடங்களாக உருவாக்கி வரும் சைல்ட் பெஸ்ட் ஆங்கிலக் கல்லூரியின் வருடாந்த நிகழ்வுகளுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக அரசியல்துறைத் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம.எம் பாஸில்,கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ்,வைத்தியர் ஏ.எஸ்.எம்.பௌசாட், வைத்தியர் என்.எம்.பாயிஸ், வைத்தியர் எம்.ஐ.ஷர்மிளா பேகம், எந்திரி ஏ.எச்.எம்.முஜாஹிட், சட்டத்தரணி ஐ.எல்.எம்.றமீஸ், சட்டத்தரணி எம்.ஏ.எம்.முபீத், சட்டத்தரணி எம்.ஜே.ஜாவிட் நிஸ்ஹாத்,மற்றும் ஜாஸீர் ஹமீட், ஏ.ஆர்.கலாப்f, ஏ.எம்.றியாஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாக பங்குகொண்டிருந்தார்கள்.
பார்வையாளர்களால் மண்டபம் நிறைந்திருந்த நிகழ்வின் இணைப்பாளராக தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.எச்.அல் இஹ்ஷான் செயற்பட்டதுடன் எம்.எஸ்.எம்.சப்ரீன் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.
நிகழ்வின் இறுதியில் மாணவ மணிகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.