கோத்தாபயவுடன் முஸ்லிம் சமூகம் கைகோர்க்க வேண்டும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


நாட்டின் முன்­னேற்­றத்­திற்கும், சமா­தானம் மற்றும் சக­வாழ்வைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவு­டனும், அர­சாங்­கத்­து­டனும் முஸ்லிம் சமூகம் கைகோர்க்க வேண்­டு­மென்று அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றது. நாட்டின் ஏழா­வது நிறை­வேற்று அதி­கா­ர­மு­டைய ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள கோத்­தா­பய ராஜபக் ஷவிற்கு வாழ்த்துத் தெரி­வித்து அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­வினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள டுவிட்டர் பதி­வி­லேயே இவ்­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அதில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது:

“புதிய ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்றுக் கொண்­டுள்ள கோத்­தா­பய ராஜபக் ஷ விற்கு வாழ்த்­துக்கள். இந்­நி­லையில் நாட்டின் பிர­ஜைகள் அனை­வரும், குறிப்­பாக, முஸ்லிம் சமூ­கமும் நாட்டின் முன்­னேற்­றத்­திற்கும் நாட்டில் சமா­தானம் மற்றும் சக­வாழ்வைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் ஜனா­தி­ப­தி­யு­டனும், அரசாங்கத்துடனும் கைகோர்ப்போம்” என்று அப்பதிவின் ஊடாக ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக்கொண்டிருக்கிறது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -