நாட்டின் முன்னேற்றத்திற்கும், சமாதானம் மற்றும் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுடனும், அரசாங்கத்துடனும் முஸ்லிம் சமூகம் கைகோர்க்க வேண்டுமென்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வலியுறுத்தியிருக்கிறது. நாட்டின் ஏழாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக் ஷவிற்கு வாழ்த்துத் தெரிவித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
“புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டுள்ள கோத்தாபய ராஜபக் ஷ விற்கு வாழ்த்துக்கள். இந்நிலையில் நாட்டின் பிரஜைகள் அனைவரும், குறிப்பாக, முஸ்லிம் சமூகமும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் நாட்டில் சமாதானம் மற்றும் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கும் ஜனாதிபதியுடனும், அரசாங்கத்துடனும் கைகோர்ப்போம்” என்று அப்பதிவின் ஊடாக ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -