உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை இன்று


யிர்த்த ஞாயிறு (ஏப்ரல் 21) பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான விடயங்களை கண்டறிவதற்கான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஆணைக்குழுவின் தலைவரும், பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி இதனைத் தெரிவித்தார். சுமார் 200 பக்கங்களைக் கொண்டதாக இந்த இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 22 ஆம் திகதி இந்த தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.
கடந்த மே மாதம் 29 ஆம் திகதி தெரிவுக்குழு முதன்முறையாக கூடியமை குறிப்படத்தக்கது. அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இன்று மாலை ஊடகவியலாளர்களுடனான சந்திப்பொன்று இடம்பெறவிருப்பதாக பிரதி சபாநாயகர் தெவித்துள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர், கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் உள்ளிட்ட 60 பேரின் சாட்சியங்களை பாராளுமன்ற தெரிவுக்குழு பதிவுசெய்துள்ளது.
குறைபாடுகள் மற்றும் கடமைகளில் தளர்வு எவ்வாறு இடம்பெற்றது என்பவற்றை கண்டவறிவதே பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பணியாக அமைந்திருந்தாக பிரதி சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -