ஆணைக்குழுவின் தலைவரும், பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி இதனைத் தெரிவித்தார். சுமார் 200 பக்கங்களைக் கொண்டதாக இந்த இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 22 ஆம் திகதி இந்த தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.
கடந்த மே மாதம் 29 ஆம் திகதி தெரிவுக்குழு முதன்முறையாக கூடியமை குறிப்படத்தக்கது. அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இன்று மாலை ஊடகவியலாளர்களுடனான சந்திப்பொன்று இடம்பெறவிருப்பதாக பிரதி சபாநாயகர் தெவித்துள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர், கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் உள்ளிட்ட 60 பேரின் சாட்சியங்களை பாராளுமன்ற தெரிவுக்குழு பதிவுசெய்துள்ளது.
குறைபாடுகள் மற்றும் கடமைகளில் தளர்வு எவ்வாறு இடம்பெற்றது என்பவற்றை கண்டவறிவதே பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பணியாக அமைந்திருந்தாக பிரதி சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.