கல்லெறிந்து தாக்குதல் நடத்தி, இருவரைக் காயப்படுத்திய, யாசகர் ஒருவர் அட்டன் பொலிஸாரால் கைது

க.கிஷாந்தன்-

ட்டன் நகரில் அமைதியற்ற முறையில் செயற்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தி, இருவரைக் காயப்படுத்திய, யாசகர் ஒருவர் அட்டன் பொலிஸாரால்

02.10.2019 அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது தாக்குதலில் பாடசாலை மாணவியொருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மனநிலை பாதிக்கப்பட்டவர் எனச் சந்தேகிக்கப்படும் குறித்த யாசகரை பிடிப்பதற்கு பிரதேசவாசிகள் முயன்ற போது, அவர் அட்டன் ஜூம்மா பள்ளிவாசலுக்குள் சென்று மறைந்துக்கொண்டதாக தெரிவிககப்படுகின்றது. இதனையடுத்து அட்டன் பொலிஸார் யாசகரை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

இதேவேளை, அட்டன் நகரில் சில இளைஞர்கள் குறித்த யாசகரை கேலிக்குட்படுத்தும் வகையில் நடத்துவதால், அவ்வாறு நடத்தும் இளைஞர்களை குறித்த யாசகர் கற்களால் தாக்குவாரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அமைதியற்ற முறையில் நடந்துக்கொண்ட குறித்த யாசகரை அட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி, நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவரை அங்கொடை மனநல வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக, அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -