பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ் பிரிவூ தோட்டத்தில் இயங்கும் அண்ணா சிரேஷ்ட முதியோர் கழகத்தின் ஏற்பாட்டில் முதியோர் தினம் மற்றும் சிறுவர் தின விழா 07.10.2019 அதன் தலைவர் அந்தோனி சு+சை தலைமையில் மிகவூம் சிறப்பாக நடைபெற்றது.
தோட்டத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் முதியோர்களுக்கு ஆசிவேண்டி விஷேட பூஜைகள் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து. முதியோர்களை நினைவூ கூரும் வகையில் மரக்கன்றுகள் பிரதம அதிதிகளால் நாட்டப்பட்டது.
அரசாங்கத்தினால் 160 முதியோர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கிவைக்கப்பட்டது.
இக்கழகத்தினை ஆரம்பித்து இரண்டு வருடகாலத்தில் முன்பள்ளி மாணவர்களை ஊக்குவித்தல் சிரமதான பணி அரசபாடசாலைகளில் கல்லி கற்று சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பாடசாலை உபகரணங்கள் உள்ளிட்ட சமூக பணிகளை மாதாந்தம் இவர்களால் சேர்க்கப்பட்ட பணத்தில் இவ்வாறான சமூகசேவைகளை மேற்கொண்டு வரும் 160 முதியோர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இன்நிகழ்வில் தேச அபிமானி தேசபந்து அகில இலங்கை சமாதான நீதவான் பிரிடோ நிறுவன நிகழ்ச்சி திட்ட இயக்குனர் எஸ் கே. சந்திரசேகரன் பெரன்டினா நிறுவன இணைப்பதிகாரி என்.கோகுல் கிராம அதிகாரி திருமதி வீனாதேவி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எஸ் சுபாஷினி நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் எஸ் யோகராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இவ்விழாவை சிறப்பாக நடத்துவதற்கு பிரிடோ நிறுவனம் மற்றும் பெரன்டினா சமூகசேவை நிறுவனங்கள் அனுசரனை வழங்கியமை குறிப்பிடதக்கது
இதேவேளை விழாவில் கலந்துகொண்ட அனைத்து அதிகளுக்கும் முதியோர்களால் மகுடம் ச+ட்டி கௌரவித்தனர்