கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா ஏற்பாடு செய்த கண் பரிசோதனை முகாமில் தமிழ், முஸ்லிம் உறவுகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

எச்.எம்.எம்.பர்ஸான்-
ண்ணில் வெள்ளை படர்தல் நோயுள்ளவர்களை இனங்கண்டு இலவச சத்திர சிகிச்சை மேற்கொள்ள கண்களை பரிசோதிக்கும் முகாம் இன்று திங்கட்கிழமை (28) ம் திகதி மீராவோடை தாருஸ்ஸலாம் பள்ளிவாசலில் இடம்பெற்றது.
அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் அனுசரணையில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா ஏற்பாடு செய்த இப் பரிசோதனை முகாமில் கல்குடா தொகுதியிலிருந்து முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழ், முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனர்.
இதில் குறித்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 88 பேர் இனங்காணப்பட்டுள்ளதோடு அவர்களுக்கான இலவச சத்திர சிகிச்சை எதிர்வரும் 4ம் திகதி நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதென்று ஜம்இய்யாவின் பிரதித் தலைவர் எஸ்.எச்.அரபாத் சஹ்வி தெரிவித்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -