எழுநூறு படகுகளை ஒரே தடவையில் நிற்பாட்டும் வகையில் புதிய நவீயின தொழிநுட்பத்தில் வாழைச்சேனை துறைமுகத்தை புனர்நிர்மாணம் செய்யவுள்ளோம்.


எச்.எம்.எம்.பர்ஸான்-
வாழைச்சேனை துறைமுகத்தை நான்காயிரம் மில்லியன் ரூபாய் செலவில் மீண்டும் புனர்நிர்மாணம் செய்யவுள்ளோம் என்று விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எம்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
ஓட்டமாவடியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,
தற்போது இருநூற்றி நாற்பது படகுகள் நிற்பாட்டப்படுகின்ற வாழைச்சேனை துறைமுகத்தில் ஒரே தடவையில் எழுநூறு படகுகள் நிற்பாட்டுகின்ற இடமாக அதனை புனர்நிர்மாணம் செய்து இலங்கையிலே மிகப் பிரதானமான மீன்பிடித் துறைமுகமாக வாழைச்சேனை துறைமுகத்தை மாற்றியமைக்கவுள்ளோம்.

வாழைச்சேனை துறைமுகத்தை புதிய நவீயின தொழிநுட்பத்தின்கீழ் அமைச்சர் பீ.ஹரீசன் வழிகாட்டலில் புனரமைக்கவுள்ளோம்.
மீனவர்களின் பிரதானமான வாழ்வாதாரமாகவுள்ள இவ் வேலைத்திட்டத்தை வழங்கியுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு விசேடமாக நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன் என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -