ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் 19வது நினைவு தினத்தை முன்னிட்டு கத்தமுல் குர்ஆனும் துஆப் பிரார்த்தனையும் திகாமட்டுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜங்க அமைச்சரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் எச். எம். எம். ஹரீஸ் அவர்களின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனைக் காரியாலயத்தில் நாளை (16) திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் உலமாக்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் எஸ்.ரி.எல். மஜீட், மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள், , கட்சியின் போராளிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜங்க அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் எச். எம். எம். ஹரீஸ் அவர்களின் காரியாலயமானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காரியாலயமாக கடந்த 30 வருடங்களாக தலைவர் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் காலத்திலிருந்து இயங்கிவருகின்றமைகுறிப்பிடத்தக்கதாகும்.