சுகாதார இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட ஐந்து பாரளமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். சாரதி அனுமதி பத்திரத்துக்கான மருத்துவ சான்றிதழைப் பெறுவதற்கு மக்கள் படும் அவலங்களை இவர்கள் உணர்வார்களா? குறைந்தது மக்களின் அவலத்தைப்போக்க கரையோர பிரதேசத்தில் மேலதிக நிலையம் ஒன்றை அமைத்து நிருவாக ரீதியாக செய்யக்கூடிய இந்த சிறிய பணியையாவது இவர்கள் செய்வார்களா? என மக்கள் தாங்களது ஆதங்கங்களை வெளியிடுகின்றனர்.
முகநூலில் சியாம் என்ற ஒருவரின் அனுபவமும் ஆதங்கமும் இது:
பொதுமக்கள் சார்பான வேண்டுகோள்
சாரதி அனுமதிப்பத்திரமும் மருத்துவ சான்றிதளும்
இன்று அதிகாலை 4.00 மணிக்கு சாய்ந்தமருதுவில் இருந்து அம்பாரைக்கு 4.45க்கு Medical எடுப்பதற்கு வந்த போது எனக்கு முன்பே சுமார் 80 பேர் வரிசையில் நிற்கின்றனர் தற்யோது நேரம் 6.15 இப்போது சுமார் 150 பேர் வரை வரிசையில் இதன் பிறகு வருபவர்களின் நிலை...... ஒரு நாளைக்கு 130 பேர் மாத்திரம் பரீட்சிக்கப்படுகின்றனர் ஒவ்வொரு நாளும் சுமார் 150-200 பேர் சந்தர்ப்பம் கிடைக்காமல் திரும்பிச் செல்கின்றனர் தமது தொழில்களையும் வேலை களையும் விட்டு வரிசையில் நின்று சந்தர்ப்பமும் கிடைக்காது அம்பாரைக்கோ அல்லது மட்டக்களப்பு Medical Center க்கோ சென்று திரும்ப வேண்டியுள்ளது - இத்தனைக்கும் 8.30 மணிக்கேநிலையம் திறக்கப்படுகிறது அவ்வாறு காத்திருந்தும் ஏதாவது குறைபாடு இருந்தால் மீண்டும் அலைய வேண்டும் இத்தனைக்கும் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ நிலையம் மாத்திரம் உள்ளது என்பதனாலேயே இந்த அவல நிலை இதனை பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் தலையீடு செய்து குறைந்தது மாவட்டத்துக்கு இரண்டு நிலையத்தையாவது அமைப்பதற்கு உரிய அமைச்சருடன் பேசி பெற்றுத்தர முன்வர வேண்டும் என பொதுமக்கள் சார்பாக வேண்கோள் விடுக்கின்றேன் பொது மக்களும் தங்களது கருத்துகளை பதிவிடுமாறும் கேட்டுக் கொள்கின்றேன் பிரயோசனமான தகவல் என கருதினால் அதிகம் பகிருங்கள்...