சவூதி அரேபியாவின் மஜ்லிசுஸ் சூரா தலைவர் அஷ்ஷெய்க் கலாநிதி அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் இப்ராஹீம் இலங்கை விஜயம்!!

த்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சவூதி அரேபியாவின் மஜ்லிசுஸ் சூரா தலைவர் அஷ்ஷெய்க் கலாநிதி அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் இப்ராஹீம் இன்று (09) சபாநாயகர் கரு ஜயசூரியவை பாராளுமன்றத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இச்சந்திப்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். பௌசி மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கைக்கு பல்வேறு விதத்தில் சவூதி அரேபியா உதவிகளை வழங்கி வருகின்ற போதிலும் சபாநாயகர் கரு ஜயசூரியவின் அழைப்பின்பேரில் இலங்கை வந்த குறித்த முக்கிய பிரமுகரை வரவேற்க வேண்டிய முஸ்லிம் கலாச்சார அமைச்சர் உள்ளிட்ட ஏனைய முஸ்லிம் அமைச்சர்களாவது பிரசன்னமாகியிருகாதது குறையாகவே நோக்கவேண்டியுள்ளது.
குறுகிய எண்ணிக்கையைக் கொண்ட போரா இன தலைவரை வரவேற்பதற்கு வழங்கப்பட்ட முன்னுரிமையில் சிறு பகுதியைக் கூட சவூதி அரேபியா பிரமுகருக்கு வழங்கவில்லை என்பது வெளிப்படை. இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச அவர்கள் குறித்த பிரமுகரை வரவேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -