ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் விசேட கலந்துரையாடல்


திர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் விசேட கலந்துரையாட ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் தற்போது அலரி மாளிகையில் கூடியுள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் மற்றுமொரு கலந்துரையாடல் இன்று மதியம் இடம்பெற்றிருந்தது. இதன்போது, பாட்டளி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், திகாம்பரம், ரிஷாத் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகிய அமைச்சர்கள் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க இணங்கியுள்ளதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ டுவிட்டர் பதிவு ஒன்றை மேற்கொண்டு தெரிவித்திருந்தார்.
இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் வாரம் அறிவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு அறிவித்ததாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் அத தெரண செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -