போரா சமூகத்தினரது சர்வதேச மாநாடு, பம்பலப்பிட்டியிலுள்ள போரா சமூகத்தின் பிரதான பள்ளிவாசலை மையப்படுத்தி, தொடர்ந்து 10 நாட்கள் (01 - 10) ஆரம்பமாகியுள்ள நிலையில், இம்மாநாட்டின் நான்காவது நாள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபாவும் விசேட விருந்தினராக சமூகமளித்திருந்தார். இதன்போது போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவரினால் பைஸர் முஸ்தபாவுக்கு விசேட நினைவுச் சின்னமொன்று வழங்கப்பட்டது.
போரா சமூகத்தினருக்கு தனதும், தனது நாட்டு மக்களினதும் சமாதானத் தூதை எத்தி வைப்பதாகவும், இம்மாநாடு சிறப்புற இடம்பெற வாழ்த்துவதாகவும் பைஸர் முஸ்தபா இதன்போது ஆன்மீகத் தலைவரிடம் குறிப்பிட்டார்.