கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும்"அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" எனும் திட்டத்தின் ஊடாக குச்சவெளி தி/தி/அந் நூரியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஆசிரியர் விடுதிக்கான கட்டிடம் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களால் இன்று (09) திறந்து வைக்கப்பட்டு பாவனைக்கு விடப்பட்டது
பிரதியமைச்சரை மாணவர்கள் உற்சாக வரவேற்பளித்தார்கள்.
பாடசாலை அதிபர் எம்.ஐ.ஸாஜிபு தலைமையில் இடம் பெற்ற இக் கட்டிட திறப்பு விழா நிகழ்வில் திருகோணமலை வலயக் கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர்களான ஹாபிஸ் மரைக்கார், மகாதேவா,கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் மற்றும் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்களான மீசான், ரொசானா,பர்சானா உட்பட வட்டார வேட்பாளர் றஹ்மான் யூசூப்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.