பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையினை கட்டுப்படுத்துவதற்கான விழிப்பு




ஏஎம் றிகாஸ்-
தெற்காசிய நாடுகளில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையினை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வூட்டும் மேற்கத்தேய நாடுகளின் பிரதிநிதிகளைக்கொண்ட விசேட குழு தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் இக்குழுவில் உள்ளடங்கியுள்ளனர்.
இக்குழுவினர் நேற்று 03.09.2019 மாலை மட்டக்களப்பு- காயாங்கேணி கடற்கரையோரப்பிரதேசத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இராணுவம், பொலிஸ் பாடசாலை மாணவர்கள் மற்றும் உல்லாச விடுதிகளின் பணியாட்களும் இச்செயற்பாட்டில் பங்கேற்றனர்.
இவர்கள் காயாங்கேணி கடற்கரையில் ஒரு மணி நேரம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு சுமார் 250 கிலோ கிராம் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் திண்மக்கழிவுகளைச் சேகரித்தனர்.
இவர்கள் கண்டி, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை போன்ற பிரதேசங்களுக்கும் விஜயம்செய்து பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


  
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -