மறைந்த மாபெரும் தலைவரின் 19 வது நினைவு தினத்தை முன்னிட்டு!


வித்தாய்ப்போன எங்கள் முத்து
சமூகத்தின் சத்திற்காய் வித்தாய் போனதொரு முத்து
அரசியல் அநாதைகளை தத்தெடுக்க கல்முனை பெத்தெடுத்த சொத்து
எத்திசையிலும் சித்தி பெறும் முக்தி பெற்று கத்தி அவர்
நாங்கள் கடைசி ஈரம் காயும் வரை கத்தி கத்தி அனுப்பவிட்டோம் வழியனுப்பி
*****************
முருங்கை மரத்துப் புக்களின் இடைவெளிக்கும் முடங்கிப் போன நாங்கள்
வேங்கைகளாய் பாய்ந்து வெற்றி பெற வாய்ப்பளித்த வள்ளல்
உன் கால் துசுபட தகுதியற்ற அரசியல் அலங்கோலங்களில்
இன்னும் உன்னை வைத்து பிழைப்பு போகுது எங்களுக்கு
*****************
முட்டி நிறைய பாலை வைத்து காத்திருக்கும் புனையாய்
உன்னை வைத்து ஏங்கி நிற்கிறோம் எம்மை முஸ்லிமாய் இனம்காட்ட
தலைவா! என்ற ஒரு சொல்லிற்கு சமகாலத்தில் உன்னை விட யாருண்டு
மர வேருண்டு அதில் நீருண்டு ஆனால் மனிதா நீ இல்லையே!
*********************
உன் தலைகண்டு மெச்சியதில் பலருண்டு பல்லிளித்தவருமுண்டு
உன் குரல் கேட்டு பெருந்தலைவா! என இதயத்தால் இளைப்பாறும் நாள் வருமா
தொலை நோக்குப் பார்வை ஒன்றால் எம்மை விட்டு தொலைதுரம் போனாயோ
நான் எனும் நீயாய் எம்மை அரசியல் பேய்களாய் ஆக்கிவிட்டாயே
************************
உன்னை கேட்டதில் யாரும் பதில் சொல்லவில்லை சொல்லவும் மாட்டார்கள்
ஒவ்வொரு ஈமானிய இதயத்திலும் நித்தியமாய் நீயிருக்க
எம் தலைவா உன்னை காட்டிக்கொடுக்க மனமில்லை எங்களுக்கு
நீ இறைவனிடம் விரைவாய்ச் சென்ற பின்பும்….
**************************
என்றும் அன்புடன்,
முஸ்லிம் காங்கிரஸ் போராளி,
சர்ஜுன் லாபீர்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -