தோப்பூரில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் ஒசுசல கிளையைத் திறந்து தருமாறு பிரதேச மக்கள் உரிய பகுதியினரிடம் கோரிக்கை .


எப்.முபாரக்-
திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தோப்பூரில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் ஒசுசல கிளையைத் திறந்து தருமாறு பிரதேச மக்கள் உரிய பகுதியினரிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

தோப்பூரில் ஒசுசல மருந்தகம் திறக்கப்படாமையால் இங்குள்ள நோயாளர்கள் வைத்தியர்கள் பரிந்துரைக்கின்ற தரமான உரிய மருந்துப்பொருள்களை நியாய விலையில் கொள்வனவு செய்வதில் பெரிதும் சிரமங்களை எதிர்கொள்வதாகக் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், மட்டக்களப்பு, கொழும்பு உள்ளிட்ட வெளியிடங்களுக்குச் சென்றுகூட சில மருந்துகளை வாங்கவேண்டியுள்ளதாகவும் நோயாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தோப்பூரில் ஒசுசல கிளையொன்றைத் திறப்பதன் வாயிலாக தோப்பூர் மட்டுமன்றி இதற்கு அண்மையிலுள்ள வெருகல், மூதூர், சேருவில உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மூவின மக்களும் நன்மை பெறுவார்கள்.

இது குறித்து உரிய பகுதியினர் கவனம் செலுத்தவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -