இதில் சாய்ந்தமருது ஜும்மா பள்ளி வாயல் நிருவாகம்,சாய்ந்தருது முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் தலைமையிலான கல்முனை பிரதிநிதிகள், கல்முனை மாநகர மேயர் றக்கீப் தலைமையிலான மருதமுனை பிரதிநிதிகள்,நற்பிட்டிமுனை முன்னாள் மாநகர சபை உறுப்பினர் தௌபீக் தலைமையிலான பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான நஸீர், அலிசாஹிர் மௌலானா மற்றும் கட்சியின் செயலாளார் நாயகம் நிஸாம் காரியப்பர், கட்சியின் தவிசாளர் அப்துல் மஜீட் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
சுமூகமாக இடம் பெற்ற கருத்து பரிமாறல்கள் கல்முனையின் இருப்பு தொடர்பான எதிர் கால சவால்கள் தௌடர்பில் ஆழமாக ஆராயப்பட்டது.இந்த பேச்சு வார்த்தைகளின் முக்கிய அம்சமாக இந்த பிரச்சினைக்கான தீர்வு விரைந்து எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் தௌடர்பில் வலியுறுத்தியதோடு இன்னும் ஒரு சில தினங்களில் தமிழ் தரப்புகளோடு பேசி ஓர் உடன்பாடு காணப்பட வேண்டடியதன் அவசிம் தொடர்பிலும் தலைவர் றவூப் ஹக்கீம் வலியுறுத்தினனார்.
இதனிடையே கருத்து தெரிவித்த சாய்ந்தமருது சார்பு பிரதிநிதிகள், சாய்ந்தமருதுக்கான சபை உருவாக்கப்பட்டதன் பின் கல்முனையயின் இருப்புக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் படசத்தில், நாங்கள் எங்களின் சபையை கைவிட்டு உங்களோடு கைகோர்க்க பின்நிற்க மாட்டோம் தேவை என்றால் அதனை நாங்கள் எழுத்திலும் தருவோம்.என வலியுறுத்தி பேசினார்கள். இந்த வாய்ப்பபை, இந்த காலத்தை உரிய.தரப்புகள் சாதகமாக பரிசீலித்து, இதய சுத்தியோடு பேசி பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டும்.
ஆதம்பாவா ஜலால்டீன்
முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்
