கல்முனைத்தொகுதி ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளரும் கல்முனை பிராந்திய அபிவிருத்தக்குழு இணைத்தலைவருமான சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் றஸாக் எடுத்துக்கொண்ட முயச்சியின் காரணமாக ஒருகோடி எழுபது லட்சம் ரூபாய் செலவில் சாய்ந்தமருது சந்தை வீதிக்கு காபட் இடும் பணிகள் 2019.08.31 இல் நிறைவடைந்தது.
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனையின் பேரிலும் கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க அவர்களின் வழிகாட்டலிலும் , நெடுஞ்சாலைகள் , வீதி அபிவிருத்தி , மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் கபீர் ஹாசிம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டிலும் மனங்களை இணைக்கும் “ ரண் மாவத்” ( தங்கப் பாதை ) திட்டத்தின் கீழ் குறித்த வீதிக்கான காபட் இடும் பணி இடம்பெற்றது.
நீண்ட காலமாக அபிவிருத்தியில் பின்தங்கிய நிலையில் காணப்படும் சாய்ந்தமருதுப் பிரதேசத்துக்கு சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் றஸாக் அவர்கள் பல வீதிகளை புனரமைத்தது உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை செய்திருப்பது குறிப்பிடக்கூடிய விடயமாகும்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நேரடி கண்காணிப்பில் இடம்பெற்ற மேற்படி சந்தை வீதி, கடந்தகாலங்களில் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டது. தற்போது வீதி புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் வீதியை புனரமைப்பதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
