அத்துடன் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தும் முன்மொழிவு ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி வெளிவந்துள்ள தகவலிகளின்படி டிசம்பர் மாதத்துக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமென நம்புகிறார்கள். ஆனால் அடுத்த ஏப்ரல் வரை கூட அது ஒத்திவைக்கப்படலாம் என்று தெரிவித்தார்.
ஜனாதிபதி தனது பதவிக் காலம் குறித்து உச்சநீதிமன்றத்தின் கருத்தை மீண்டும் பெறலாம் என்றும் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக ஜனாதிபதித் தேர்தல் தாமதமாகலாம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் இரண்டையும் ஒரே நாளில் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த நேரத்தில், 19 ஆவது திருத்தம் எப்போது நடைமுறைக்கு வந்தது, அதன்படி அவரது ஜனாதிபதி பதவிக்காலம் எப்போது முடிவுக்கு வரும் என்று உச்சநீதிமன்றத்தில் ஜனாதிபதி கேட்க வேண்டும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.ஐபிசி
