சுயதொழில் முயற்சியாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

பாறுக் ஷிஹான்-
தேசிய தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அதிகார சபையினால் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிலுள்ள சுயதொழில் முயற்சியாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு திங்கட்கிழமை (27)பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது வீட்டுத் தோட்டத்திற்கான உரம் மற்றும் விதைகள் பெறல்,முதலீட்டு கடன் பெறல், வர்த்தக உரிமம் வியாபாரப் பதிவு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வழங்குதல் கால்நடை தொழிலாளர்களின் பிரச்சினை என்பன தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டன.
நாவிதன்வெளி பிரதேசசெயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.நிஜந்தன் சவளக்கடை கமநல சேவை மத்திய நிலைய உத்தியோகத்தர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் கால்நடை திணைக்கள அதிகாரிகள் சுகாதார திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டமேலும் பலர் கலந்துகொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -