இந்த நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து ஆட்சி செய்த கட்சிகளில் சுதந்திரக்கட்சி முஸ்லிம்களுக்கு பெரும் சேவைகளை செய்துள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெரும் கட்சியாக வளர்ந்த போது தலைவர் அஷ்ரப் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டுடனேயே இணைந்தார். ஒரு சில தப்புத்தண்டா நடந்த போதும் தலைவர் அஷ்ரபின் ஆட்சிக்காலம் முஸ்லிம் அரசியலில் பொற்காலமாகும்.
அதன் பின்னர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக்கட்சியிடம் அடிமைப்பட்டு கிடந்தும் முஸ்லிம்களுக்கென எதையும் சாதிக்க முடியவில்லை.
ஆயினும் 2005ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உலமா கட்சி சுதந்திரக்கட்சியின் தலைவராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து இந்த நாட்டு முஸ்லிம்கள் பயங்கரவாதத்திலிருந்து விடுதலை பெற ஒத்துழைத்தது.
பின்னர் 2015ம் ஆண்டு டயஸ்போராக்களின் சூழ்ச்சிகளுக்கு இரையாகிய முஸ்லிம்கள் ஐ தே க தலைமையிலான நல்லாட்சிக்கு வாக்களித்து ஏமாந்தது மட்டுமன்றி அம்பாரை முதல் மினுவாங்கொடை வடை அடி வாங்கியது மட்டுமே மிச்சமானது.
இந்த நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆரம்பிக்கப்பட்டவுடனேயே இந்த நாட்டின் அதிக வாக்குகள் பெற்ற முதலாவது கட்சியாக பரிணமித்தது.
எம்மை பொறுத்தவரை மஹிந்தவும் மைத்திரியும் ஒரு வீட்டு பிள்ளைகளாகும். இருவரும் இணைந்து செயற்படுவதே நாட்டுக்கு நல்லது என்பதை கடந்த சில வருடங்களாக உலமா கட்சி சொல்லி வருகிறது.
இந்த வகையில் பொதுஜன பெரமுனவும் சுதந்திரக்கட்சியும் இணையுமாயின் பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அறுபது லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெறுவார் என உலமா கட்சி எதிர் பார்க்கிறது.
