நாட்டில் குடும்ப‌ ஆட்சி கூடாது என்ப‌வ‌ர்க‌ள் இந்த‌ நாட்டின் க‌ட‌ந்த‌ கால‌ அர‌சிய‌ல் அறிவ‌ற்ற‌வ‌ர்க‌ளாக‌ இருக்கின்ற‌ன‌ர்.-முஸ்லிம் உல‌மா க‌ட்சி


ல‌ங்கை சுத‌ந்திர‌ம் பெற்ற‌திலிருந்து குடும்ப‌ ஆட்சிக‌ள்தான் அர‌ங்கேறியுள்ள‌ன‌. ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சியை பொறுத்த‌வ‌ரை டி எஸ் சேனாநாய‌க்க‌ முத‌ல் ட‌ட்லி, ர‌ணில் வ‌ரை ஒரே குடும்ப‌த்த‌வ‌ர்க‌ளே. அதே போல் ப‌ண்டார‌நாய‌க்க‌, ஸ்ரீமாவோ, அனுர‌, ச‌ந்திரிக்கா என‌ அனைவ‌ரும் அர‌சிய‌ல் அதிகார‌த்தில் இருந்த‌வ‌ர்க‌ளே. அது ம‌ட்டும‌ன்றி ச‌ந்திரிக்கா ஆட்சியில் அவ‌ர் ஜ‌னாதிப‌தியாக‌வும் அவ‌ர‌து தாயார் ஸ்ரீமாவோ பிர‌த‌ம‌ராக‌வும் , அனுர‌ ப‌ண்டார‌நாய‌க்க‌ அமைச்ச‌ராக‌வும் ஒரே நேர‌த்தில் இருந்த‌தையும் ப‌ல‌ர் மற‌ந்து ராஜ‌ப‌க்ஷ‌ குடும்ப‌த்துக்கு ம‌ட்டும் விர‌ல் நீட்டுவ‌து நியாய‌மான‌த‌ல்ல‌. என்று முஸ்லிம் உல‌மா க‌ட்சியின் தலைவர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார்.
ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ குடும்ப‌த்தின் பிர‌ப‌ல்ய‌மான‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் ம‌க்க‌ள் வாக்குக‌ளால் தெரிவு செய்ய‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளே த‌விர‌ பாராளும‌ன்ற‌த்துக்கு நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் அல்ல‌. ம‌ஹிந்த‌, பெசில், ச‌ம‌ல், நாம‌ல் கூட‌ ம‌க்க‌ள் வாக்குக‌ளால் தெரிவு செய்ய‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் என்ப‌தை நாம் ம‌ற‌க்க‌ முடியாது.

இந்த‌ நிலையில் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ நினைத்திருந்தால் கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌வை பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ராக்கி அமைச்சு ப‌த‌வியையும் கொடுத்திருக்க‌ முடியும். அவ‌ர் அவ்வாறு செய்யாத‌த‌ன் மூல‌ம் ம‌ஹிந்த‌ ஜ‌ன‌நாய‌க‌த்தை பெரிதும் ம‌தித்தார் என்ப‌து தெளிவாகிற‌து. த‌ன‌து குடும்ப‌த்த‌வ‌ர்க‌ள் ம‌க்க‌ளால் தெரிவு செய்ய‌ப்ப‌ட‌ வேண்டும் என்ப‌தில் அவ‌ர் உறுதியாக‌ இருந்தார்.
முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் ஹ‌க்கீம் த‌ன‌து ச‌கோத‌ர‌ரை, மாம‌னாரை பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ராக‌ நிய‌மித்தார். இன்னொரு ச‌கோத‌ர‌ரை க‌ல்முனையின் அபிவிருத்திக்கு பொறுப்பாக‌ நிய‌மித்தார். இந்த‌ அத்துமீற‌ல் குடும்ப‌ ஆட்சியை ஏற்றுக்கொண்ட‌ முஸ்லிம்க‌ள் ம‌ஹிந்த‌ விட‌ய‌த்தில் ம‌ட்டும் குடும்ப‌ ஆட்சி என்ப‌து ந‌டு நிலைச்ச‌மூக‌த்துக்கு அழ‌கான‌த‌ல்ல‌.

ஒரு ஜ‌ன‌நாய‌க‌ நாட்டில் முழு குடும்ப‌மும் தேர்த‌லில் போட்டியிட்டு, வென்று ஆட்சிக்கு வ‌ர‌லாம். அதில் த‌டையே இல்லை. அதுதான் ஜ‌ன‌நாய‌க‌மும் கூட‌.

ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வின் ச‌கோத‌ர‌ர்க‌ள் மிக‌வும் ந‌ம்பிக்கைக்குரிய‌வ‌ர்க‌ளாக‌ இருந்த‌தாலேயே ம‌ஹிந்த‌ ஜ‌னாதிப‌தியாகி நான்கு வ‌ருட‌ங்க‌ளுள் யுத்த‌த்தை முடிவுக்கு கொண்டு வ‌ந்தார் என்ப‌தை முஸ்லிம்க‌ள் ம‌ற‌க்க‌ முடியாது. யுத்த‌ம் முடிந்த‌தால் இந்த‌ நாட்டு சிங்க‌ள ம‌க்க‌ள் பெற்ற‌ ந‌ன்மையை விட‌ கிழ‌க்கு முஸ்லிம்க‌ளே மிக‌ப்பெரிய‌ ந‌ன்மைக‌ளை பெற்ற‌ன‌ர்.
ஆக‌வே சிங்க‌ள‌ ம‌க்க‌ளின் அமோக‌ வ‌ர‌வேற்பை பெற்றுள்ள‌ ம‌ஹிந்த‌வின் பெரு ந‌ம்பிக்கையை பெற்ற‌ கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌வை வெல்ல‌ வைப்ப‌த‌ன் மூல‌ம் முஸ்லிம்க‌ளும் அடுத்த‌ ஆட்சியில் ச‌ம‌ ப‌ங்காள‌ராக‌ மாறி அர‌சிய‌லில் சிங்க‌ள‌ பெரும்பான்மையுட‌ன் இணைந்து ப‌ய‌ணிப்ப‌தே சிறுபான்மை ச‌மூக‌ங்க‌ளின் புத்திசாலித்த‌ன‌மான‌ முடிவாக‌ இருக்கும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -