திருமலையில் விபத்துக்குள்ளான காருக்குத் தீ வைத்த இளைஞர்கள்-அங்கு பதற்றநிலையால் பொலிஸார் குவிப்பு




திருகோணமலை அலஸ்கார்டின் பகுதியில் இன்று (14) இரவு ஏற்பட்ட வீதி விபத்தை தொடர்ந்து பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரது கார் ஒன்று எரிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

மாலை 7.30 மணியளவில் திருகோணமலை அலஸ்கார்டின் பகுதியில் பாரிய விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து மது போதையில் வாகனத்தை ஒட்டி வந்த சிங்கள சாரதி வேகக் கட்டுப்பாட்டை இழந்ததனால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்போது குடிபோதையில் வந்த சாரதியின் கார் மோட்டார் வண்டியில் மோதி மோட்டார் வண்டியின் சைலன்ஷர் வெடித்து எதிரே வந்த கார் கண்ணாடியில் பட்டதுடன் பின்பு கார் சாரதி வேகக் கட்டுப்பாட்டினை இழந்து முன்னாள் நின்ற முற்சக்கரவண்டில் மோதியதில் முற்சக்கரவண்டி பிரண்டுள்ளது பின்னர் கார் அருகில் இருந்த கடைக்குள் புகுந்ததில் அங்கிருந்த ஒரு வயோதிபப்பெண் காயத்திற்குள்ளாகியுள்ளார்.

அங்கு நின்றிருந்த  இளைஞர்கள் குடிபோதையில் வந்த சாரதியின் காரை தீயிட்டு எரித்ததனால் அந்தப் பகுதியில் தற்போது பதற்றம் நிலவுகிறது. குறித்த பகுதியில் பொலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.ஐபிசி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -