மர்ஹூம் எம்.சி.அப்துல் ஹமீத் வாழும் ஒரு சரித்திரம்!!!

ல்விக்காய் தனது பாரிய அர்ப்பணிப்பை செய்த சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக்கொண்ட மர்ஹூம் எம்.சி.அப்துல் ஹமீத் அவர்கள் இம்மண்ணை விட்டுப்பிரிந்து ஓராண்டுகள் நிறைவைந்துள்ள நிலையில் அவருக்காக பிராத்தனை செய்து நினைவுகூரும் நிகழ்வு சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் 2019.08.18 ஆம் திகதி சட்டத்தரணி எம்.சி.ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மர்ஹூம் எம்.சி.அப்துல் ஹமீத் அவர்களது குடும்ப உறவினர்கள் மதப்பிரமுகர்கள் கல்வியாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வின்போது மர்ஹூம் எம்.சி.அப்துல் ஹமீத் தொடர்பிலான சொற்பொழிவு பலவும் இடம்பெற்றன.

(ஆர்.எம்.நௌசாத் அவர்களது முகநூல் பக்கத்திலிருந்து....)

வாழும் ஒரு சரித்திரம்
ல் அமான் கலவன் பாடசாலையாக இருந்ததை கல்முனையின் தளபதி எம்.சீ அஹமது எம் பி அவர்கள் கல்வி அமைச்சர் பதிஉதீன் மஹ்மூத் அவர்களின் ஒத்துழைப்புடன் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியாக உருவாக்கிய போது அதன் ஸ்தாபக அதிபராக நியமனம் பெற்றவர் அல்ஹாஜ் எம் ஸி ஏ ஹமீத் (மாஸ்டர்) அவர்கள்..

இவரது தன்னலம் கருதாத சேவையினால் கல்லூரி தன் ஆரம்ப நிலையிலிருந்து உச்ச வளர்ச்சி பெற்றது...
சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் பொருளாளராகவும் இருந்து அதன் அபிவிருத்தியிலும் பங்கேற்று இப்போதைய அதன் கம்பீரமான தோற்றத்துக்கும் கால்கோளாக அமைந்தவர்
உலக-ஊர் வரலாறுகளை தன் விரல் நுனியில் வைத்திருக்கும் அபார ஞாபகசக்தியும் நுண்ணறிவும் வாய்க்கப்பெற்ற அன்னார் தன் 93 ஆவது வயதில் காலமானார்கள் ...
அன்னாரின் முதலாம் வருட நினைவு கூரலும்-அவருக்கான துஆப் பிரார்த்தனையும் ஞாபகார்த்த மலர் வெளியீடும் ஒரு உருக்கமான நிகழ்வாக இன்று (18.08.2019) சாய்ந்தமருதில் நிகழ்ந்தது
அன்னாரது குடும்பத்தினர் -உறவினர்- கல்வியுலக நண்பர்கள்-ஊர்-பள்ளிவாசல் பிரமுகர்கள் ஆகியோர கலந்து கொண்டு அவருடனான தம் அழியா நினைவுகளை மீட்டிக் கொண்டனர் ....

யா அல்லாஹ் அன்னாருக்கு உயரிய சொர்க்க வாழ்வை அளிப்பாயாக ..ஆமீன் ...

நிகழ்வின்போது பிடிக்கப்பட்ட படங்கள்....





























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -