மேல் மாகாணத்தில் 1000 ஆசிரியர் வெற்றிடம் -கல்வித் திணைக்களம் தெரிவிப்பு

ஐ. ஏ. காதிர் கான்-

மேல் மாகாணத்தில் ஆயிரம் ஆசிரியர்களுக்கு வெற்றிடம் நிலவுவதாக, மேல் மாகாணக் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த வெற்றிடங்களுக்காக, பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள், இம் மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, திணைக்களத்தின் அதிகாரி​யொருவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற ஆசிரியர் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, இப்பட்டதாரிகள் சேவைகளில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் தொடர்பிலான ஆவணங்கள் தற்போது வௌியிடப்பட்டுள்ளதாகவும், அந்த ஆவணத்திற்கமைய நேர்முகத் தேர்விற்கு அவர்கள் அடுத்த வாரத்தில் அழைக்கப்படவுள்ளதாகவும், மேல் மாகாண கல்வித் திணைக்கள அதிகாரி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -