சாய்ந்தமருதில் வீடு தீக்கிரை : உடமைகள் எரிந்து நாசம் !!

எம்.ஐ.எம். சர்ஜுன்-
சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்று இன்று மதியம் தீக்கிரையாகி உள்ளது. தீ பரவலுக்கான சரியான காரணம் இன்னும் அறிய முடிய வில்லை.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது சாய்ந்தமருது 18ஆம் வட்டாரத்தில் உள்ள இந்த வீடு களஞ்சிய சாலை போன்று இயங்கி வந்ததாகவும், அங்கு பசளை போன்ற பொருட்கள் களஞ்சியப்படுத்தி வைத்திருந்ததாகவும் அறிய முடிகிறது.
அயலவர்கள் துணையுடன் தீ பகுதியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் கல்முனை மாநகர சபை தீயணைப்பு படையினர் போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.
முழுமையாக சேதமாக்கப்பட்ட இந்த அனர்த்தத்தினால் களஞ்சியசாலையில் இருந்த சகல பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -