உலக முஸ்லீம்களின் முக்கிய புனித தளமான மக்கமா நகரம் சவூதி அரேபியா ஜித்தாவில் இருக்கிறது.
அங்கு முஸ்லீம்களின் இறுதிக் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்ற முஸ்லீம்களில் பணம் படைத்தவர்கள் இக்கடமையினை நிறைவேற்றுவர் அதிலும் ஒவ்வொரு வருடமும் ஒரே நாளில் பல இலட்ச பேர் அங்கு ஒன்று கூடுவர்.
ஹஜ் புனித பயணத்தின் போது மக்காவில் இருந்து சம் சம் கிணற்று நீரை எடுத்து வருவதை முஸ்லீம்கள் வழக்கமாக வைத்துள்ளனர். மக்காவுக்கு இந்தியாவில் இருந்து சேவை அளிக்கும் ஏர் இந்தியாவின் இரண்டு விமானங்களில் சம்சம் நீரை எடுத்து வர தடை செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அறிவிப்பினை திரும்ப பெறுவதாகவும், புனித பயணிகளுக்கு ஏற்பட்ட அசெளகரியத்துக்கு வருந்துவதாகவும் ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அறிவிப்பினை திரும்ப பெறுவதாகவும், புனித பயணிகளுக்கு ஏற்பட்ட அசெளகரியத்துக்கு வருந்துவதாகவும் ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.
அத்துடன் இனிமேல் மக்கா பயணம் மேற்கொள்ளும் இரு ஏர் இந்தியா விமானங்களிலும் கூடுதலாக 5 கிலோ வரை கொண்டு வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த கூடுதல் அனுமதி பயணிகள் கொண்டு வரும் கைப்பை சுமைகளுக்கு பொருந்தாது என ஏர் இந்தியா இன்று வெளியிட்ட விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.