ஜே.வி.பியினால் கொண்டுவரப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று..!

ஜே.வி.பியினால் கொண்டுவரப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலான விவாதம் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளதுடன், நாளை (11) மாலை வாக்கெடுப்பும் இடம்பெற்

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு தமது உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பது தொடர்பில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இன்று கூடி தீர்மானிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இது குறித்து எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூடி ஆராய்ந்த போதிலும், இது குறித்து இறுதி நிலைப்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில் நாளை காலை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு மீண்டும் கூடி, இறுதி முடிவினை எடுக்கவுள்ளது.

எவ்வாறாயினும், இந்தப் பிரேரணையை தோற்கடிப்பதாக சபைமுதல்வர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -