அமைச்சர் மனோவின் ஏற்பாட்டில் சவளக்கடை வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதர உதவி வழங்க நடவடிக்கை..!



அஸ்லம் எஸ்.மௌலானா-
தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மோன்பாடு, இந்து சமய அலுவல்கள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டனியின் தலைவருமான மனோ கணேசனின் ஏற்பாட்டில் அமைச்சு நிதி ஒதுக்கீட்டின் மூலம் அம்பாறை மாவட்டத்தின் நாவிதான்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சவளக்கடை பிரதேசத்தில் வாழும் வறிய குடும்பங்களுக்கு வாழ்வதர உதவிகளை வழக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒழுங்குகளை அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா சமூக சேவைகள் அமைப்பின் தலைவருமான கே.ஆர்.றிஸ்கான் முகம்மட் மேற்கொண்டு வருகின்றார்.

இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று வியாழக்கிழமை (13) சவளக்கடை பல்தேவை கட்டிடத்தில் நடைபெற்றது. இதன்போது குறித்த பிரதேசத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தவர்களின் சுயதொழில் வாய்ப்புகளுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டதுடன் வாழ்வாதார உதவிகளுக்கான விண்ணப்பப் படிவங்களும் அவரால் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது எதிர்காலத்தில் அமைச்சர் மனோ கணேசன் ஊடாக இப்பிரதேசத்தில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக றிஸ்கான் முகம்மட் தெரிவித்தார்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -