உபவேந்தர் நாஜீம், பணபரிமாற்று இயந்திர செயற்பாட்டை ஆரம்பித்து வைத்தார்.


எம்.வை.அமீர்-
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்துக்கு முன்பாக உள்ள பிரதான வீதியில், மக்கள் வங்கியினால் பொருத்தப்பட்ட பணபரிமாற்று இயந்திரத்தின் செயற்பாட்டை, உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்கள் 2019.06.12 ஆம் திகதி பாவனைக்காக ஆரம்பித்து வைத்தார்.

பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி, கலாநிதி யூ.எல்.செயினுடீன் அவர்கள் நீண்டகாலமாக எடுத்துக்கொண்ட முயற்சியின் காரணமாக, பொருத்தப்பட குறித்த பணபரிமாற்று இயந்திரத்தினூடாக இங்கு கல்விகற்கும் சுமார் 700 மாணவர்களும், 100 ஊழியர்களும் நன்மையடையவுள்ள அதேவேளை குறித்த பிரதேச மக்களும் பாதசாரிகளும் நன்மையடைவர்.
மக்கள் வங்கியின் சம்மாந்துறை முகாமையாளர் எம்.ஏ.சி.எம்.சபீக் அவர்களது தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மக்கள் வங்கியின் அம்பாறை பிராந்திய உப முகாமையாளர் எச்.எம்.எம்.சுபைர், தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல்.செயினுடீன், திணைக்களங்களின் தலைவர்களான எம்.எப்.நவாஸ், கலாநிதி எம்.எச்.எம்.ஹாரூன் உள்ளிட்ட விரிவுரையாளர்களும் உதவிப் பதிவாளர் எஸ்.அர்சனாவும் ஊழியர்களும் கலந்துகொண்ட அதேவேளை மக்கள் வங்கியின் பிராந்திய வியாபார ஊக்குவிப்பு உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.நபீல் மற்றும் ஆவணங்கள் திரட்டும் அதிகாரி சி.நிசார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நீண்ட இடைவேளையின் பின்னர், உபவேந்தர் நாஜீம் அவர்களது நேரடியான கண்காணிப்பின் கீழ், முடங்கியிருந்த கற்றல் செயற்பாடுகள் அனைத்தும் இறுக்கமான பாதுகாப்புக்கு மத்தியில் கடந்த 2019.06.10 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் தேவைகளை இன்னும் இலகுபடுத்தும் செயற்பாடாகவே குறித்த நிகழ்வு பார்க்கப்படுகிறது. 











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -