சுதந்திர பொறுப்பின் நீட்சி,ஐ எப் ஜே மற்றும் சர்வதேச தொழிலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான நிர்ப்பந்தப் பணி மற்றும் நியாயமான ஆட்ச்சேர்ப்பு பற்றிய அறிக்கையிடல் தொடர்பான செயலமர்வு இன்று(29) திருகோணமலை லோட்டஸ் பார்க் விடுதியில் நடைபெற்றது.
இதில் முப்பதிற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டார்கள்.
இதில் ஊடகவியலாளர்கள் எவ்வாறு அறிக்கையிடுவது,ஊடகத் தொழிலின் பண்புகள் மற்றும் எவ்வாறு குழுவாக செயற்படுவது போன்ற விடயங்கள் தெளிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் வளவாளர்களாக சட்டத்தரணி இலஞ்சன ஹேரத்,தாஹா முசம்மில்,சீதா ரஞ்சனி மற்றும் ரஸ்மின் போன்றோரும் கலந்து கொண்டார்கள்.