இந்நிகழ்வின் முக்கிய தருணமாக, நூலின் முதல் பிரதியை ஹாஷிம் உமர் அவர்களிடம் வழங்கும் சிறப்புத் தருணம் இடம்பெற்றது. இலக்கியம், கலை, ஊடகம் மற்றும் சமூக சேவையில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் ஹாஷிம் உமருக்கு, நூலாசிரியர் தனது கவிதைகளின் நெஞ்சார்ந்த பிரதியை அளித்தது விழாவின் மையக் காட்சியாக அமைந்தது.
நூல் வெளியீட்டு விழாவில் திருமதி சுகந்தி இராஜகுலேந்திரா, கொழும்பு தமிழ் சங்கத் தலைவி எனும் வகையில் தலைமை ஏற்று, தம் ஊக்கமும் பாராட்டுகளையும் தெரிவித்தார். மேலும், கவிஞர் மேமன் கவி, மற்றும் பிரபல எழுத்தாளர் கே. பொன்னுத்துரை ஆகியோர் உரையாற்றி, நூலாசிரியரின் பங்களிப்பு, கவிதைகளின் சமூக உணர்வும், இலக்கிய வலிமையும் பற்றி உரக்கப் பேசினர்.
கவிமாமணி டாக்டர் ஜெயவீரன் ஜெயராஜா அவர்கள் தம் உரையில், “ஏழையின் தாஜ்மாஹால்” என்பது வெறும் கவிதைத் தொகுப்பல்ல, ஒரு சமூகத்தின், ஏழைகளின் கனவுகளும் வலிகளும் சொல்லும் குரலாகவே இது உருவெடுத்தது” எனக் கூறினார்.
அத்துடன், நூலில் இடம்பெற்ற கவிதைகள் சிலவற்றை நூலாசிரியரே வாசித்து, அவற்றின் பின்னணியையும் உணர்வையும் பகிர்ந்து கொண்டார். நிகழ்வில் பல கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் மற்றும் இலக்கிய விரும்பிகள் கலந்துகொண்டு விழாவை மெருகூட்டினர்.
இந்த நூல், சாதாரண மக்களின் வாழ்வியல் அனுபவங்களை கவிதை வடிவில் பதிவு செய்துள்ளதோடு, ஏழைகளின் கனவுகளை ‘தாஜ்மாஹால்’ எனும் உருவகத்தின் மூலம் விளக்கும் வகையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விழா, நவீன தமிழ்கவிதைக்கு ஒரு வலுவூட்டலாகவும், சமூகத்தை பிரதிபலிக்கும் கலைவடிவங்களை முன்னெடுக்கும் முயற்சியாகவும் வரவேற்கப்பட்டது.





0 comments :
Post a Comment