ஏறாவூர் மற்றும் ஏறாவூர்ப்பற்று ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக கழிவு நீர் அகற்றும் பாரிய திட்டமொன்றினை முன்னெடுப்பது தொடர்பான உயர்மட்ட மாநாடு


ஏறாவூர் ஏஎம். றிகாஸ்-
ட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் மற்றும் ஏறாவூர்ப்பற்று ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக கழிவு நீர் அகற்றும் பாரிய திட்டமொன்றினை முன்னெடுப்பது தொடர்பான உயர்மட்ட மாநாடு 02.04.2019 நடைபெற்றது.
சுமார் 1300 கோடி ரூபா வெளிநாட்டு நிதியுதவியுடன் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சினால் இத்திட்டம் அமுல்செய்யப்படவுள்ளது.

இத்திட்டம் குறித்து ஆராயம் மாநாடு ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் முதல்வர் ஐ. அப்துல் வாஸித் தலைமையில் நடைபெற்றது.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை பிரதான பொறியிலாளர் எஸ். சுதர்சன், பிராந்திய முகாமையாளர் பொறியிலாளர் டிஏ. பிரகாஸ், மாவட்ட பொறியிலாளர் ஏஎல்எம். பிர்தௌஸ் மற்றும் பிரதேச செயலாளர் வீ. யூசுப் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பலர் இம்மாநாட்டில் பிரசன்னமாயிருந்தனர்.
இத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையடுத்து இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் கழிவுநீரை சேகரித்து, பராமரிப்பதற்கு சுமார் இருபது ஏக்கர் நிலத்தைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக இம்மாநாட்டில் ஆராயப்பட்டது.

சேகரிக்கப்படும் கழிவுநீரை புன்னக்குடா மற்றும் சவுக்கடி கடலின் ஆழமான பகுதியில் விடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஆறுமுகத்தான்குடியிருப்பு தொடக்கம் செங்கலடி வரையிலான தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதேசங்கள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் சனநெரிசல் காணப்படுவதனால் நிலத்தடிநீர் அழுக்கடைந்து குடிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்திணைக்களத்தினால் உறுதிப்படுத்தப்பட்தையடுத்து கழிவு நீர் அகற்றும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரியொருவர் கருத்துத்தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -