இங்கு கல்முனை மாநகர சபையை ஆள்வது என்றதல்ல பிரச்சினை. மாறாக தமிழர்கள் கேட்கும் கொடியேற்றப்பள்ளி முதல் பாண்டிருப்பு வரையான செயலகமாகும்.
எவ்வாறு சாய்ந்தமருதுக்கு பிரதேச செயலகம் முட்டாள்த்தனமாக கொடுக்கப்பட்ட பின் அதன் எல்லையை வைத்து சா. மருதுக்கான பிரதேச சபை கோரிக்கை விடுக்கப்படுகிறதோ அதே போல் இவ்வாறு தமிழ் செயலகம் கொடுக்கப்பட்டால் அதன் எல்லையை வைத்து தமக்கு நகர சபை வேண்டும் என கேட்கும் பட்சத்தில் கல்முனைக்குடிக்கு ஸாஹிரா முதல் கொடியேற்றப்பள்ளி வரை பிரதேச சபை கொடுத்து கல்முனையை தமிழர்களிடம் கொடுத்தால் அந்த எல்லைக்குள் வரும் கல்முனையில் மு. கா. ம கா மட்டுமல்ல அனைத்து முஸ்லிம்களும் ஒன்று பட்டாலும் முஸ்லிம்களால் ஆட்சியமைக்க முடியாது. அந்த சபையில் ஒரேயொரு முஸ்லிம் உறுப்பினர் இஸ்லாமாபாத்திலிருந்து வருவார்?
இதையா சாய்ந்தமருது சபைக்கோரிக்கையாளர்கள் எதிர் பார்க்கின்றனர். தமக்கு சபை வேண்டும் என்பதற்காக தம் கண்ணான கல்முனையை சிதைத்து தமிழ் பயங்கரவாதிகள் கையில் கொடுப்பதா?
இவ்வாறு கல்முனை பிரித்து கொடுக்கப்படமாட்டாது என எந்தவொரு சாய்ந்தமருது புத்திசாலியும் உறுதி கூற முடியுமா?
இன்று தமிழ் கூட்டமைப்பு கேட்கும் எதையும் வழங்கும் நிலையில் அரசு உள்ள யதார்த்தம் உங்களுக்கு புரியவில்லையா?
ஒரு வேளை இவ்வாறு கல்முனை தமிழர்களிடம் கொடுக்கப்பட்டு அதன் விளைவாக இன மோதல்கள் ஏற்பட்டால் சந்தர்ப்பம் பாத்திருக்கும் காரைதீவு சாய்ந்தமருதை தாக்க மாட்டார்களா? மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் தர முடியுமா?
யுத்த காலத்தில் காரைதீவு காடையர்கள் சாய்ந்தமருதை தாக்கிய ஒரேநேரத்தில் கல்முனை காடையர்கள் கல்முனைக்குடியை தாக்கியதும் அதே போல் கல்முனை தாக்கப்படும் போது சாய்ந்தமருது தாக்கப்பட்டதையும் மறந்து விட்டோமா?
யுத்தம் முடிந்தாலும் இன்னமும் இனவாதம் உள்ளதையும் பயங்கரவாதிகள் வளர்ந்து வரையும் இனவாத பேச்சுக்கள் மலிந்து கிடைப்பதையும் நாம் காணவில்லையா?
ஆகவே கல்முனையிலிருந்து சாய்ந்தமருதை பிரிக்க கூடாது. கல்முனையை காக்க அனைத்து முஸ்லிம்களும் ஒற்றுமைப்படுவோம்.