ஜனாதிபதியின் விசேட ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட ரொட்டவெவ மையவாடி வீதியின் திறப்புவிழா

அப்துல்சலாம் யாசீம்-
னாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் விசேட ஒதுக்கீட்டின் கீழ் மொரவெவ பிரதேச சபை சிரேஷ்ட உறுப்பினர்
ஏ. எஸ். எம்.பைசர் அவர்களினால் நிர்மாணிக்கப்பட்ட மையவாடி வீதி திறப்பு விழா இன்று (08) இடம்பெற்றது.
மொரவெவ பிரதேச சபையின் தவிசாளர் பொல்ஹேன்கொட உபரத்தின ஹிமியினால் இவ்வீதி உத்தியோகபூர்வமாக மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
மொரவெவ பிரதேச சபையின் வழிகாட்டலுடன் 1350,000/=ரூபாய் செலவில் இவ்வீதி நிர்மாணிக்கப்பட்டதுடன், ரொட்டவெவ அஸ்மி பாலர் பாடசாலையின் மீள் நிர்மான வேலைகளும் புதிதாக சீரமைக்கப்பட்டு இன்றைய தினம் மாணவர்களின் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டது.

ரொட்டவெவ மையவாடி மிகவும் காடாக காட்சியளித்த நிலையில் ரொட்டவெவ பிரதேச சபையின் சிரேஷ்ட உறுப்பினர் ஏ. எஸ். எம். பைசர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் மொரவெவ பிரதேச சபையின் தவிசாளர் பொல்ஹேன்கொட உபரத்தின ஹிமி தெரிவித்தார்.
இதேவேளை மொரவெவ பிரதேசத்தில் அபிவிருத்தி திட்டத்தின் போது இன மத வேறுபாடு இன்றி சமமான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவு‌ம் தவிசாளர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பள்ளி வாசல் தலைவர் ஏ. எம். அமான், ரொட்டவெவ ஹிப்ல் மத்ரஸாவின் மௌலவி மார்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -