தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை 1979ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2019 - ஏப்ரல் முதலாம் திகதியில் 40 வருடங்கள் புர்த்தியை முன்னிட்டு நாடலாரீதியில் பாரிய வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளது. அத்துடன் மே மாதம் முதலாம் திகதியன்று நாடு முழுவதிலும் 150 மாதிரிக் கிராமங்கள் 25 மாவட்டங்களிலும் ஆரம்பித்து வைக்கப்படுகின்றன. அத்துடன் மே முதலாம் திகதி மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவின் மறைந்த தினத்தினைக் குறிக்கு முகமாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் சொத்துக்கள், வீடுகள், காணிகள் பெற்ற 4000 குடும்பங்களுக்கு வீட்டுரிமைப் பத்திரங்கள் அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால் வழங்கி வைக்கப்பட உள்ளது.
மேற்கண்டவாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அபதிகார சபையின் தலைமை அலுவலகத்தில் இன்று(26-03-2019 நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டிலேயே வீடமைப்பு அதிகார சபையின் தலைவா் தலைவா் எஸ்.பலன்சுரிய தெரிவித்தாா்.
இவ் ஊடகவியலாளா் மாநாட்டில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் ஆலோசகா் டப்ளியு. டி .அயிலப் பெரும, மற்றும் உப தலைவா், பிரதிப் பொதுமுகாமையாளா்களும் இம் மாநாட்டில் கலந்து கொண்டனா்.மேலும் அங்கு கருத்து தெரிவித்த தலைவா் பலன்சுரிய.
2015ஆம் ஆண்டு வீடமைப்பு நிரமாணத்துறை மற்றும் கலாச்சார அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால் ஆரம்பிக்கப்பட்ட சமட்ட செவன வீடமைப்புத் திட்டத்தில் மாா்ச் 26ஆம் திகதி வரை 1934 கிராமங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 270 கிராமங்கள் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்க்பபட்டுள்ளன. மேலும் ஏப்ரல் - மே மாதத்திற்குள் 150 கிராமங்கள் மக்களிடம் கையளிக்கப்பட உள்ளன. ஒரு வீடமைப்புக் கிராமத்தில் 25 வீடுகளும், உள்ளக வீதிகள், வீட்டுத்தோட்டம், மின்சாரம், குடிநீர்,இலவசமாக 07-10 போ்ச் காணித்துண்டுகளும் வழங்கப்படுகின்றன. 2019ஆம் ஆண்டில் 569 கிராமங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் வடக்கு கிழக்கில்
44 கி ராமங்கள் நிர்மாணிக்கப்பட்டு கையழிக்கப்பட்டுள்ளன. அம்பாறையில் 103 கிராமங்கள், மட்டக்களப்பில் 134, திருகோணமலையில் 135 கிராமங்கள், மன்னாாில் 91 கிராமங்கள், முல்லைத்தீவில் 69 கிராமங்கள், யாழ்ப்பாணத்தில் 105 கிராமங்கள், வவுனியா 144,கிளிநொச்சியில் 72 கிராமங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன இவ் வீடமைப்புக் கிராமங்கள் அடுத்த 2019 டிசம்பருக்குள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்படும்.
இத்திட்டங்களை விட வீடமைப்புக் கடன்திட்டமும், வட கிழக்கில் யுத்தத்தினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் உதவி திட்டத்தின் கீழும் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால் மக்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றன.
மாா்ச் 31ஆம் திகதி வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைமைக் காரியாலயத்திலும் 25 மாவட்டக் காரியாலயங்களிலும் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மத அனுஸ்ட்டான நிகழ்வுகள் நடைபெறும். அத்துடன் அன்றைய தினம் சகல மாவட்டங்களிலும் 150 மாதிரிக் கிராமங்கள் நிர்மாணப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்படும். அத்துடன் மே 1ஆம் திகதி காலம் சென்ற ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் மறைந்த தினத்தினை குறிக்குமுகமாக கொழும்பு நகரிலும் ஏனைய மாவட்டங்களிலும் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வீடுகள், தொடா்மாடி வீடுகள், காணிகளைப் பெற்றவா்களுக்கான வீட்டுரிமைப்பத்திரம் வழங்கு நிகழ்வு கொழும்பு புதுக்கடையில் உள்ள ஆர்.பிரேமதாச உருவச் சிலைக்கருகே வழங்கி வைக்கப்படும்.
மே2ஆம் திகதி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அ்திகார சபையின் பணிப்பாளா் சபை ஆரம்பிக்கப்பட்ட தினமான இத் தினத்தில் இச் சபையில் சேவையாற்றி ஓய்வுபெற்றவா்கள் மற்றும் தற்பொழுது உள்ள ஊழியா்களைக் கொண்டு 40ஆண்டுகள் தேசிய வைபவம் நடைபெறும். இத் தினத்தில் சிறந்த சேவையாற்றிய ஊழியா்கள் கௌரவிக்கப்படுவாா்கள். ஏப்ரல் 20, 21ஆம் திகதிகளில் பத்தரமுல்லையில் உள்ள அபேகமவில் வீடமைப்புக் கண்காட்சிகள் நடைபெறும். இத் தினத்தில் வீடமைப்பு மாவட்டக் காரியாலயங்கள் ஊடாக நிர்மாணிக்க்பபட்ட சிறந்த வீடமைப்புக் கிராமங்கள் காட்சிப்படுத்தப்படும்.