வாழ்வியல் பயில்வோம் கருத்துரை நிகழ்வு..


காத்தான்குடி முஹாசபா வலையமைப்பின் அந்நிஸா பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் "வாழ்வியல் பயில்வோம் " எனும் தலைப்பிலான பெண்களுக்கான இலவச கருத்துரை நிகழ்வு அந் நிஸா பிரிவின் தலைவி சகோதரி ஹனீஸா பஹ்த் தலைமையில் 17.03.2019ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழுகையை தொடர்ந்து புதிய காத்தான்குடி நூரானியா ஜும் ஆ பள்ளிவாயலில் சிறப்பாக இடம்பெற்றது.

இக் கருத்துரை நிகழ்வுக்கு முஹாசபா வலையமைப்பின் பணிப்பாளர் எம்.பஹ்த் ஜுனைட் அதிதியாக கலந்துகொண்டதுடன் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ILM.ரிபாஸ் MBBS,MSC அவர்கள் பிரதம அதியாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

பயன்மிக்க இக் கருத்துரை நிகழ்வில் அதிகமான சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.








எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -