20 கழகங்களுக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியாவில் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா அவர்களினால் கிண்ணியா பிரதேச செயலகத்தில் வைத்து இன்று (06) வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த உபகரணங்களை மீள்குடியேற்ற செயலணியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தலா 50000 ரூபா பெறுமதியான சுமார் 20 கழகங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன .
10 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களை ஆரம்ப கட்டமாக வழங்கி வைக்கப்பட்டன தொடர்ந்தும் அடுத்தடுத்த கட்டங்களில் ஏனைய கழகங்களுக்கும் வழங்கவுள்ளதாக பிரத்தியேகச் செயலாளர் இதன் போது தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.ஹனி, பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ் போன்றோர்கள் உடனிருந்து வழங்கி வைத்தார்கள்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -