ஓட்டமாவடியில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்.


ல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா ஏற்பாடு செய்த பகிரங்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் திட்டமிட்டபடி மிகவும் சிறப்பான முறையில் ஓட்டமாவடி அல் கிம்மா தனியார் வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள வளாகத்தில் நேற்று (23) நடைபெற்று முடிந்தது.

ஜம்இய்யாவின் நிருவாகத் தலைவரும் நாவலடி மர்கஸ் அந்நூர் கலாபீடத்தின் அதிபருமாகிய அஷ்ஷெய்க் ஏ.ஹபீப் காசிமி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்குடா முஸ்லிம் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் வளவாளர்களாக உண்மை உதயம் இஸ்லாமிய மாத இதழ் பிரதம ஆசிரியர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி, கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி, கந்தளாய் இப்னு தைமியா அரபுக் கல்லூரியின் அதிபர் P.B ஜாபிர் (ஷரபி), நாவலடி மர்கஸ் அந்நூர் கலாபீட உப அதிபர் அஷ்ஷெய்க் வீ.ரீ.எம்.முஸ்தபா தப்லீகி ஆகியோர்கள் கலந்து கொண்டு உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -