"நைற்றா" தலைவர் நசீர் ஹாபிஸுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம்.ஹிஸ்புழ்ழாஹ் வாழ்த்து.

முன்னாள் முதலமைச்சர் நசீர் ஹாபிஸ் அவர்களை "நைற்றா" நிறுவனத்திற்கு தலைவராக நியமிக்கப்பட்டமைக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது ஊடக அறிக்கையில் "நைற்றா"நிறுவனம் இலங்கையில் உள்ள மிக முக்கியமான நிறுவனமாகும்.
நைற்றா - (தேசிய கைத்தொழில், தொழிற்பயிற்சி அதிகார சபை)யானது இளைஞர்களுக்கு பயிற்சி வழங்குதல்,அவர்களுக்கான வழிகாட்டல் வழங்குதல், பல்வேறுபட்ட நவீன தொழிற்பயிற்சிகள் வழங்கல் போன்ற பல்வேறுபட்ட அம்சங்களை உள்ளடக்கிய ஒரு முக்கியமான நிறுவனம்.

இந் நிறுவனமானது வரவு செலவுத்திட்டத்திலே அதிகமான நிதியைப் பெற்றுக் கொள்ளக் கூடியதும்,
இளைஞர்களுக்கு புதிய புதிய தொழிற் பயிற்சிகளை வழங்க கூடிய நிறுவனமாகும்.

அவ்வாறான ஒரு நிறுவனத்திற்கு தவிசாளராக நசீர் ஹாபிஸ் அவர்கள் நியமிக்கப்பட்டமைக்கு தான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

புதிய பயிற்சி நெறிகளை இருக்கின்ற தொழில் பயிற்சி நிலையங்களில் ஆரம்பித்தல், புதிய நிலையங்களை கிழக்கு மாகாணம் மட்டுமல்லாமல் ஏனைய மாகாணங்களிலும் ஆரம்பித்தல் போன்ற வேலைகளை புதிய தலைவர் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் மேலும்
பல புதிய பயிற்சி நிலையங்களை நிறுவ கிழக்கு மாகாண ஆளுநர் என்ற வகையில் முழு ஒத்துழைப்பையும் தான் வழங்குவதோடு புதிய தலைவர் தனது பணியை மிக சிறப்பாக செய்ய எல்லாம் வல்ல இறைவன் உதவி செய்ய வேண்டும் தனது ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டபட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -